திட்டமிடப்பட்டது போல இலங்கையில் நடக்காமல் ஆசிய கோப்பை விளையாட்டு ஐக்கிய அரேபிய அமீரகத்தில் நடந்தாலும் இலங்கை கோப்பையை வென்றிருக்கிறது என்பது சரியான ஒன்று. மிக மோசமான பொருளாதார பிரச்னை காரணமாக இலங்கை இந்த ஆசிய கோப்பை போட்டியை அமீரகத்துக்கு மாற்ற வேண்டியிருந்தாலும், அந்த பாலைவனத்தில் கூட தசுன் ஷனகாவின் விளையாட்டு வீரர்கள் அங்கு இயல்பாகவே இருந்தார்கள். துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தில் ஞாயிறு அன்று நடந்த இறுதிப் போட்டியில் எல்லா விதமான தடைகளையும் தகர்த்து பாகிஸ்தானை இலங்கை 23 ரன்களில் வீழ்த்தியது. துரத்தும் அணியினர் பெரும்பாலும் வெற்றி பெறும் ஒரு போட்டியில் இலங்கை ஐந்து விக்கெட்டுகளுக்கு 58 ரன்களே எடுத்து தடுமாறிக்கொண்டிருந்த போதுதான், பின்புற காப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பானுக ராஜபக்ச மற்றும் வானிந்து ஹசரங்காவின் ஆட்டம், 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்து வெற்றியாளர்களாக வருவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. அது ஒன்றும் மலைப்பைத் தரும் இலக்கு இல்லைதான். ஆனால் போட்டிகள் கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலையில், தந்திரமான இலங்கை போட்டியாளர்களை பாகிஸ்தானால் வெற்றி கொள்ள இயலவில்லை. வேகப்பந்து வீச்சாளர் பிரமோத் மதுசனின் நான்கு விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவின் மூன்று விக்கெட்டுகள் தவிர முழுமையான ஆட்டமும் பாகிஸ்தானை 147 ரன்களுக்குள் சுருட்டியது. பாபர் அஸம்மின் அணியினரிடம் பதற்றம் இருந்தாலும், இரு நாடுகளின் ரசிகர்களுக்கும் தத்தம் அணியினர் தந்த பரிசால் மொத்தமாக மகிழ்ச்சியில் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கை இன்னும் பொருளாதார பிரச்னைகளிலிருந்து மீளாமல் இருக்கிறது என்றால், பாகிஸ்தான் மக்களையும் பொருளாதாரத்தை பாதித்திருக்கும் கடும் வெள்ளங்களுடனும் திண்டாடிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக, இந்த போட்டி அவர்களுக்கு கொஞ்சம் உற்சாகத்தை அளித்திருக்கும்.
ஆஃப்கானிஸ்தானுடனான முதல் போட்டியில் இலங்கை தோற்றிருந்தாலும், கொஞ்சம் பயணித்து இலங்கை இறுதியில் கோப்பையை வென்றது. இந்தியாவுக்கு நடந்ததோ நேரெதிர். தொடக்க ஆட்டங்களில் ரோகித் ஷர்மாவின் அணியினர் வெற்றி பெற்றனர். ஆனால் சூப்பர் நான்கு ஆட்டத்தில், இந்தியா பாகிஸ்தானிடமும் இலங்கையிடமும் தோற்றுவிட்டது. ஆஃப்கானிஸ்தான் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவுக்கான வெளியேறும் கதவு திறந்தே இருந்தது. ஏழு முறை ஆசிய கோப்பையை வென்றிருக்கும் இந்தியாவுக்கு இந்த முறை நடந்த ஒரு போட்டி நிதானிக்க வைக்கும் ஒரு அனுபவம். ரோகித், கே.எல்.ராகுல் மற்றும் விராத் கோஹ்லி என்கிற பிரதானமான மூன்று பேர் ஒன்றாக தாக்கியிருக்க வேண்டும். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முழு சதம் எடுத்து சதம் எடுக்காதிருந்த தனது நிலையை கோஹ்லி முடிவுக்கு கொண்டு வந்தாலும், அவர் மீண்டும் ஆட்டத்தில் மிளிரத் தொடங்கியது குழப்பமான நிலையிலேயே இருந்தது. ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் தேசிய தலைமையில் தனது கடைசி நாட்கள் பற்றியே அவர் பேசிக் கொண்டிருந்தார். கோஹ்லி ரன்கள் எடுப்பது முக்கியம் என்றால் அதே அளவு முக்கியம், இந்தியாவுக்கு பழைய வருத்தங்களை மறந்து ஆடும் ஒரு தலைமைக்கான தேவையும். பாரம்பரியமான
ஒரு நாள் போட்டியான ஆசிய கோப்பை, ஆஸ்திரிலேயாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடக்கவிருக்கும் ஐசிசி டி 20 உலகக் கோப்பையின் காரணமாக, டி 20 போன்ற ஒரு தோற்றத்தை பெற்றது சற்று கவலையளிக்கக் கூடியது என்றாலும் இந்தியா தொடர்ந்து ஆடுவது என்பது இன்னும் முடிவுறாத ஒரு பணி. அந்த முக்கியமான ஆட்டத்துக்கான அணி திங்களன்று அறிவிக்கப்பட்டது. தனது காயத்திலிருந்து மீண்டிருக்கும் ஜஸ்பிரீத் பும்ராஹ் தலைமையேற்பார் என்பது நல்ல விஷயம். காயத்தால் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெறாமல் போனார். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணியினருக்கு எதிரான எதிர்வரும் டி 20 ஆட்டங்கள், இந்தியாவுக்கு அதன் திட்டங்களை கூர்மைப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்.
This editorial has been translated from English, which can be read here.