மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் விமர்சனப்பூர்வமான கருத்துகள் காரணமாக, நீதித் துறையின் உயர்மட்டத்தில் நியமனங்களைச் செய்யும் கொலீஜியம் அமைப்பு கவனத்தைப் பெற்று வருகிறது. தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்கும் சட்டத்தையும் அரசியல் சாசன திருத்தத்தையும் ரத்துசெய்யும் 2015ஆம் ஆண்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு ஒரு வழக்கறிஞர் இப்போது உச்ச நீதிமன்றத்தை முறையாக அணுகியுள்ளார். இந்த மனு “சரியான நேரத்தில் பட்டியலிடப்படும்“ என்றாலும், நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான பதட்டத்தை அதிகரிக்கும் மற்றொரு அம்சமும் உள்ளது. நியமனத்திற்கான பரிந்துரைகளை அரசு தாமதப்படுத்துவது குறித்தும், இரண்டு அல்லது மூன்று முறை மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை புறக்கணிப்பது குறித்தும் ஒரு நீதிமன்ற அமர்வு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. இதன் விளைவாக, நியமனத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நீதிபதிகளாக இருப்பதற்கு அளித்திருந்த ஒப்புதலை திரும்பப் பெற்றிருக்கிறார்கள். பரிந்துரைகளை தாமதப்படுத்துவது, ‘தொடர்புடைய நபர்கள் தங்களது பெயர்களை திரும்பப் பெற்றுக் கொள்ளச் செய்வதற்கான ஒரு கருவி’ என்று அமர்வு கருத்து தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. நீதித்துறை நியமனங்களைச் செய்யும் அதிகாரத்தை நீதித்துறையிடமிருந்து திரும்பப் பெறுவதில் அரசு தீவிரமாக இருப்பது தெளிவு. ஆனாலும் ஒரு சீராய்வு மனுவால் இது சாத்தியமா என்று தெரியவில்லை. 4:1 என்று வழங்கப்பட்ட தீர்ப்பு அதே அளவிலான ஒரு அமர்வால் மட்டுமே மறு ஆய்வு செய்யப்பட முடியும். தவிர இத்தனை வருடங்கள் அரசு மறு ஆய்வு வேண்டும் என்று கோரவில்லை. முடிவுகளை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றாலும் இந்த அமைப்பின் வெளிப்படையற்ற தன்மை மற்றும் பொறுப்பேற்பு இல்லாத நிலை பற்றி எப்போதும் அமைதியாக இருக்க முடியாது என கொலீஜியம் முறையை விமர்சிக்கும் தனது தொடர்ச்சியான கருத்துகளின் ஒரு பகுதியாக கூறியிருக்கிரார் திரு. ரிஜிஜூ.
கொலீஜியம் முறை பற்றிய பெரும்பாலான விமர்சனங்களுக்கு அடிப்படை இல்லாமல் இல்லை. அது வெளிப்படையானது இல்லைதான். அதன் உறுப்பினர்கள் மற்றும் நியமனங்கள் பற்றி ஆலோசனை தரும் நீதிபதிகளும் மட்டுமே இதைப் பற்றி பரிசீலனை செய்ய முடியும் சிறந்த சட்டத் திறமையை இது ஈர்க்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சில பிணிகளை அது சரி செய்யவும் வேண்டியிருந்தது. குறிப்பாக, நீதித்துறையின் மீது நிர்வாகத்தின் செல்வாக்கு பற்றிய பார்வை இன்னமும் அப்படியே தானிருக்கிறது. 99வது அரசிலமைப்பு சட்டத் திருத்தத்தையும் தேசிய நீதித்துறை சட்ட ஆணையத்தையும் உருவாக்கும் சட்டத்தையும் ரத்து செய்த தீர்ப்பு கூட பிரச்னைகள் இருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கொலீஜியம் முறை மேம்படும் வரையில் அதை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பெரும்பான்மையானவர்கள் முடிவு செய்தார்கள். அதை மேம்படுத்தும் முயற்சி விரைவிலேயே கைவிடப்பட்டது. ஆனால் உண்மையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அரசு விரும்பினால், நியமனங்களை நிறுத்தி வைக்கும் சிறுபிள்ளைத்தனமான எதிர்வினை அதற்கான வழி இல்லை. அது ஒரு மாற்று முறையை கொண்டு வருவதற்கு வேலைசெய்ய வேண்டும். முந்தைய சட்டத்தை செல்லாமல் செய்த பலவீனங்கள் இல்லாத ஒரு முறையாக அது இருக்க வேண்டும். தேசிய நீதித்துறை சட்ட ஆணையம் என்கிற முறை காரணமாக, நீதித்துறை உறுப்பினர்களைவிட நிர்வாகரீதியான நியமனங்கள் அதிகம் இருந்தன. நீதித்துறை நியமனங்களில் நிர்வாகத்துக்கான முன்னுரிமை என்ற பெயரில் இது போன்ற பிரச்னைகளை தடுக்கும் முறையாக, இப்போதிருப்பதை விட சிறந்த ஒன்று வர வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here..