தொற்று நோய் தொடங்கி மூன்றாண்டுகளுக்குப் பிறகு, புதிய மாறுபாடுகள், வழக்குகளில் அதிகரிப்பு, மற்றும் மரணங்கள் கூட உலகெங்கிலும் பதிவாகி வந்திருக்கின்றன. ஆனால் முன்பிருந்த அபாயகரமான நிலை அளவுக்கு இல்லை. கப்பா, டெல்டா, பிஏ.2.75 மற்றும் பிஏ.2.76 ஆகியவற்றுக்குப் பிறகு, சமீபத்திய மாறுபாடு (இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது) ஓமிக்ரானனின் மீள்சேர்க்கை எக்ஸ்பிபி.1.16 ஆகும். சுமார் ஒரு டஜன் மாநிலங்களில் மிக குறைந்த அளவில் பாதிப்பு இருக்கிறது. ஆனால், அதன் விளைவாக பாதிக்கப்படக்கூடிய மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது தொடர்ச்சியாக அதிகரிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவரீதியான தீவிரத்தன்மை கவலைக்குரிய ஒன்றாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த மாதத்தில் வரிசைப்படுத்தப்பட்ட அனைத்து மரபணுக்களிலும் இந்த மாறுபாடுக்கு 30 சதவீதத்துக்கும் அதிகமான இடம் இருக்கிறது. தவிர, அதன் விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் சமூகத்தில் மாறுபாட்டில் பரவல் மற்றும் ஆதிக்கத்தை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்தியாவில் தினசரி புதிய நோய்த்தொற்றுகள் பல மாதங்களாக மிகக் குறைவாக இருப்பதால், சோதனை மற்றும் மரபணு வரிசைமுறை கடுமையாக வீழ்ந்தது. வாராந்திர சோதனை நேர்மறை விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. அதனால் மாறுப்பாடு பரவலின் உண்மையான தன்மை தெளிவாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில்தான் புதிய மாறுபாட்டையும் புதிதாகத் தோன்றக்கூடியவற்ரையும் கண்டறிய உதவும் வகையில் முழு மரபணு வரிசைமுறையை அதிகரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் நாடு சரியான நேரத்தில் செயல்பட தயார் நிலையில் இருக்கும். தொற்றுநோய்க் காலம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மரபணு வரிசைமுறையை தொடர வேண்டிய தேவை அதிகமாகவே இருக்கிறது. அல்லது இந்தியா, தொற்றுநோய் புயலில் கண்மூடித்தனமாக சிக்கிக் கொள்ளும். பெரும்பாலான பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் குறைந்தது
ஒரு வருடத்திற்கு முன்பு தங்கள் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பூஸ்டரைத் தேர்வு செய்கிறார்கள். இதனால் நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பிற்காக தடுப்பூசி மற்றும் இயற்கை நோய்த்தொற்றிலிருந்து எழும் கலப்பின நோய் எதிர்ப்பு சக்தியை இந்தியா முழுமையாக நம்பியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, 12 வயதுக்கு மேற்பட்ட இந்திய மக்கள்தொகையில் 95 சதவீதம் பேர் கலப்பின நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு சில ஓமிக்ரான் மாறுபாடுகள் அதிகரித்தபோதும் கடுமையான கோவிட் - 19 நோயிலிருந்து இந்த கலப்பின நோய் எதிர்ப்பு சக்தி மக்களைப் பாதுகாத்து வருகிறது. சொல்லப்போனால், பி.ஏ. 2க்குப் பிறகு தோன்றிய எந்த மாறுபாடுகளுடனும் மீண்டும் தொற்று ஏற்படுவது, நோயெதிர்ப்பு பாதுகாப்பை அதிகரித்திருக்கலாம். அவ்வப்போது நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்களில் ஒரு சிறிய சதவீதத்தினர், அந்த தொற்றை மக்கள் தொகை மட்டத்தில் பல வேறுபாடுகளை கொண்ட நோயெதிர்ப்பு சக்தியாக மாற்றியிருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று கருதப்படும் மக்கள்தொகையில் ஒரு சின்ன குழு மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் மக்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள், நீண்ட கால கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதால், புதிய மாறுபாடுகள் தோன்றும்போது சில அடிப்படை எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம். மூடப்பட்ட இடங்களில் மாஸ்க் அணிவது போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகள்தான் அவை. மோசமான காற்றோட்டமுள்ள இடங்களில் கூட எல்லோரும் மாஸ்க் அணிவது, இந்தியாவில் இந்த நேரத்தில் ஒரு சுகாதாரரீதியான முன்னுரிமையாக இருக்காது. ஆனால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்த தனிநபர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருப்பதை அது தடுக்கக்கூடாது.
This editorial has been translated from English, which can be read here.