வளர்ந்து வரும் நாடுகளுக்கு அரசு நடத்தும் உச்சி மாநாடான “சர்வதேச தெற்கின் குரல் மாநாடு” அதன் ஜி-20 தலைமைப் பொறுப்பில் நடக்கும் முதல் முக்கியமான ஒரு நிகழ்வு. அந்த வகையில் முக்கியமான குறியீடும் கூட.யுஎன்எஸ்சி பி5 மற்றும் ஜி 7 ஆகிய வளர்ந்த பொருளாதாரங்களுடனான உறவை உள்ளடக்கிய நிலையில், இது சர்வதேச தலைமையின் “உயர் மேஜையை” நோக்கியிருக்கும் இந்தியாவின் போக்கிலிருந்து விலகி உலகைப் பற்றி இன்னும் நியாயமான முறையில் அணுகவும், சர்வதேச ஏற்றத்தாழ்வுகளால் வளரும் நாடுகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்தவும் செய்வது கூட. இணைய வழியில் நடந்த உச்சி மாநாட்டில் தனது அறிமுக உரையில் இந்த மாற்றத்துக்கான காரணங்களை விளக்கினார் பிரதமர் நரேந்திர மோதி: “கோவிட் தொற்றுநோயின் சவால்கள், எரிபொருள், உரம் மற்றும் உணவு தானியங்களின் விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை நமது வளர்ச்சிக்கான முயற்சிகளை எப்படி பாதித்திருக்கின்றன” என்று விளக்கினார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் சர்வதேச தெற்குடன் ஒரு பொதுவான எதிர்காலத்தை கற்பனை செய்ய வேண்டிய இந்தியாவின் தேவையைக் குறித்து பேசினார். சர்வதேச தெற்கில் பெரும்பாலான நாடுகள் காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்டன என்கிற அடிப்படையில் சர்வதேச தெற்குடன் இந்தியாவுக்கு இருந்த “பொதுவான கடந்த காலத்தைப் பற்றியும்” அவர் பேசினார். 10 க்கும் மேற்பட்ட வெவ்வேறு அமர்வுகளில், இந்தியாவும் ஜி -77 இல் அங்கம் வகிக்கும் 134 நாடுகளில் 125 நாடுகளின் பிரதிநிதிகளும், யுக்ரெயின் போரின் விளைவாக சர்வதேச நிலப்பரப்பு பிளவுப்பட்டிருப்பது, தானிய ஏற்றுமதி, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் உர பற்றாக்குறை மற்றும் பயங்கரவாதம் ஆகியவை முக்கிய பிரச்சினைகளில் அடங்கும் என்பதை ஏற்றுக்கொண்டார்கள். “வளர்ச்சியை விலையாகக் கொடுத்து காலநிலை மாற்றத்துக்கான இலக்குகளை விரைவுப்படுத்துவது குறித்து முதல் உலகின் பார்வையை மறுத்து மனிதர்களை மையப்படுத்தும் உலகமயமாதல், சர்வதேச் தெற்கில் திறமையான மக்களுக்கு குடியேற்றம் மற்றும் பணி வாய்ப்பை உறுதிப்படுத்துவது, மற்றும் மீள்தன்மை கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பெறும் வாய்ப்பு” ஆகியவை பற்றி திரு.மோதி வலியுறுத்தி பேசியதும் குறிப்பிடத்தக்கது. இந்த உச்சிமாநாடு ஜி 20 தலைமை பொறுப்பில் இந்தியா இருக்கும் வருடத்தில் அதன் வெளியுறவுக் கொள்கை பார்வையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை குறிக்கிறது. யுக்ரெயின் போரை அடுத்து எந்த சார்பும் எடுக்காத நிலையில், அணிசேர கொள்கையின் உண்மையான அர்த்தத்தை அரசு மீட்டெடுக்க செய்திருக்கும் பார்வை அது. (இந்தியா தவிர்த்து வந்த குழுவான) ஜி 77 குழுவுக்கு தலைமையை கியூபா ஏற்றுக்கொண்டபோது வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி அந்த நாட்டுக்கு மேற்கொண்ட பயணமும், நாம் இணை நிறுவனரான எகிப்து அதிபரை குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்ததும் கூட குறிப்பிடத்தக்கவை.
உச்சி மாநாட்டின் சில தவிர்த்தல்களும் குறிப்பிடத்தக்கவை: அவை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். மியான்மர் சேர்க்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் ஜுண்டா ஆட்சி அங்கீகரிக்கப்படாத நிலையில், இந்தியா அதனுடன் இன்னும் நெருக்கமான உறவை பேணவும் முடிவெடுத்திருக்கிறது. உலகப் பிரச்னைகள் பற்றி ஒட்டுமொத்த தெற்கு-தெற்கின் புரிதல் காரணமாக உச்சி மாநாடு கூட்டம் இன்னும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக தெற்காசிய மற்றும் துணை கண்டத்தின் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாகவும் அப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழு எந்தவொரு பொதுவான அல்லது கூட்டறிக்கையை வெளியிடவில்லை என்பதும் கூட குறிப்பிடத்தக்கது. கூட்டத்தின் பெரும்பாலான முடிவுகள், திரு.மோதி மற்றும் திரு.திரு.ஜெய்சங்கரின் சொன்னதன் அடிப்படையிலேயே இருந்ததும் கூட. “ஜி-20யில் சர்வதேச தெற்கின் குரலாக” இந்தியாவின் குரலுக்கு செவிசாய்க்கப்பட வேண்டுமென்றால் அது பிற நாடுகளின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்து அவற்றை முன்னிறுத்த வேண்டும். இந்த வருடத்தின் பின் பகுதியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் வளரும் நாடுகளின் அசலான தலைவராக இந்தியா அதை செய்ய வேண்டும்.
This editorial was translated from English, which can be read here.