2021ல் 1,55,622 பேர் சாலை விபத்துகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; இது 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மிக அதிக எண்ணிக்கை என்கிற தகவல் அடங்கிய அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு ஒரு சில நாட்களிலேயே டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான சைரஸ் மிஸ்டிரியும் அவருடன் பயணம் செய்த நபரும் ஞாயிறு அன்று மகராஷ்டிராவின் பால்கருக்கு அருகில் அவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்திருக்கிறார்கள். பயணிகள் சீட் பெல்டுகளை அணியவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருத்தமான, தவிர்த்திருக்க கூடிய விபத்து, கார் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அதை சாலை பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக அமலாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். சீட் பெல்டுகள் மற்றும் காற்று பைகள் போன்ற விலை மலிவான பாதுகாப்பு முறைகள் காரில் பயணிக்கும் நபர்கள் தொடர்பான மரணங்களை பெரிய அளவில் குறைத்திருப்பது, இன்று தெளிவாகியிருக்கிறது. தில்லி ஐ.ஐ.டியின் போக்குவரத்து ஆய்வு மற்றும் விபத்து தடுப்பு மையம் (Transportation Research and Injury Prevention Centre) மேற்கொண்ட ஆய்வுகளின் படி நவம்பர் 2021இல் “காற்றுப் பைகளின் பயன்பாட்டின் மூலம் 63 சதவிகிதம் வரையில் மரணங்கள் குறைந்திருப்பதாகவும், தோள்-மடி பெல்ட் பயன்பாடு 72 சதவிகிதம் வரை மரணங்களை குறைத்திருப்பதாகவும், இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது 80 சதவிகிதத்துக்கும் மேல் மரணங்கள் குறைந்திருப்பதாகவும்” சொல்கின்றன. சீட் பெல்டுகளை அணியாததால் ஏற்படும் மரணங்கள் அதிகமிருந்தாலும் (2017இல் சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்ட விபத்துகளில் 26, 896 நபர்கள் இறந்திருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சரவை சொல்லியிருக்கிறது) சீட் பெல்ட் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வும் அதன் அமலாக்கமும் அதிகரித்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் காருக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை கிட்டத்தட்ட எப்போதுமே பின்பற்றப்படுவதில்லை. பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அணிந்திருப்பவர்களை விட எட்டு மடங்கு அதிகம் மோசமான காயங்களை பெறுவதாக அமெரிக்காவின் Insurance Institute for Highway Safety என்கிற நிறுவனத்தின் ஆய்வறிக்கையை பார்க்கும் போது இது வெட்ககேடு. தலைக்கான சாதனம் போன்ற பிற அமைப்புகளை சரியாக பயன்படுத்தினால் விபத்துகளின் போதான திடீர் மோதல்களில் ஏற்படும் காயங்களை அது தடுக்க உதவுகிறது.
ஐ.ஐ.டி தில்லி அறிக்கையில் சட்டிக் காட்டப்பட்டிருக்கும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், இந்திய சாலைகளின் நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் வெறும் 2 சதவிகிதமே இருந்தாலும் சாலை மரணங்களில் அவற்றின் பங்களிப்பு 36 சதவிகிதமாக இருக்கிறது. இந்த குறிப்பிட்ட விபத்தில் பயணிகளின் மரணங்களுக்கும் காயங்களுக்கும் அடிப்படையான காரணம், அதி வேக ஓட்டுதல். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின் படி 2021ல் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 56 சதவிகிதம் அதிவேக ஓட்டுதலாலேயே நிகழ்ந்திருக்கிறது. இருந்த போதும், பெரும்பாலான சாலை விபத்துகளுக்கான காரணங்களை ஆராயும் போது வெகு எளிதாக காவல்துறையினர் ஓட்டுனரின் தவறு என்று முடிவு
செய்துவிடுகிறார்கள் என்பதும் உண்மை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் உள்ள எண்கள் மிகவும் குறைவு என்று சுட்டிக் காட்டியிருக்கிறது சாலை பாதுகாப்பு அறிக்கை. இதை குறைக்க ஒரே வழி, இந்தியாவுக்கு ஏற்ற வகையில், ஆதாரங்களின் அடிப்படையிலான, விளைவுகளை தரக்கூடிய சாலை பாதுகாப்பு கொள்கைகள்தான். மோசமான சாலை வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு, போக்குவரத்து கட்டமைப்பு போன்றவற்றையும் சாலை விபத்துகளுக்கு பொறுப்பாக்குதல் போன்ற பலதரப்பட்ட கூறுகளையும் இதோடு பார்க்க வேண்டும். நகரங்களுக்கிடையிலான நெடுஞ்சாலைகளில் உள்ள மையத் தடுப்புகளை நீக்கி எஃக்கினால் செய்யப்பட்ட பாதுகாப்பு பிடிமானங்கள் அல்லது கம்பி கயிறு தடுப்புகள் ஆகியவற்றை பொருத்தலாம் என்கிற ஆலோசனையும் பரிசீலனைக்குரியது.
This editorial has been translated from English, which can be read here.