ADVERTISEMENT

அதிகரித்து வரும் பிளவு

March 11, 2023 11:57 am | Updated 11:57 am IST

தங்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகள், உலகை பிளவுப்படுத்துவதை சீனாவும் அமெரிக்காவும் அனுமதிக்க கூடாது

உலகின் இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள சரிவு மீள முடியாத நிலையை அடைந்து வருவதுபோலத் தெரிகிறது. பெய்ஜிங்கில் நடந்து வரும் தேசிய மக்கள் காங்கிரஸ் அல்லது நாடாளுமன்றத்தின் வருடாந்திர அமர்வில் உறவுகளில் அமெரிக்காவின் சமீபத்திய அணுகுமுறை பற்றி சீன தலைவர்கள் முன்வைத்த விமர்சனங்கள், இந்த செய்தியைதான் நிச்சயமாக சொல்கின்றன. மூன்றாவது முறையாக, அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு அதிபராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஜீ ஜிங்பிங், மார்ச் 6ஆம் தேதி அன்று “அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் சீனாவை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவதையும் ஒடுக்குவதையும் செயல்படுத்தியுள்ளதால்” சீனா “நாட்டின் வளர்ச்சிக்கு முன்னெப்போதும் இல்லாத கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது” என்று நாடாளுமன்றக் குழுவிடம் கூறினார். திரு. ஜீ ஜிங்பிங் நேரடியாக அமெரிக்காவின் பெயரைச் சொல்ல முடிவெடுத்தார் என்பது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் எப்படி மோசமடைந்திருக்கின்றன என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. “சீனாவை சுற்றி வளைக்க” அமெரிக்கா முயல்வதாகச் சொன்னார் சீனாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரன் கின் காங். “அது சீனாவை முந்த முற்படுகிறது, ஆனால் மோதலை விரும்பவில்லை” என்ற பைடன் நிர்வாகத்தின் கூற்றையும் அவர் நிராகரித்தார். “சீனாவை எல்லா விதத்திலும் கட்டுப்படுத்தி ஒடுக்குவதைதான் அவர் குறிக்கிறார்” என்று சொன்னார். “அமெரிக்கா நிறுத்தவில்லையென்றால், நிச்சயம் மோதல் ஏற்படும்” என்றும் அவர் கூறினார்.

நவம்பர் 2022ல் நடந்த ஜி -20 இந்தோனேசியா கூட்டத்தில் இரு தலைவர்களும் போட்டியை “பொறுப்புடன் நிர்வகிக்கப்” என்று கூறினார்கள். இது ஒரு நம்பிக்கை தரும் முயற்சியாக என்று வைத்துக்கொண்டால், சமீபத்திய நிகழ்வுகள் அப்படியொரு நம்பிக்கையை தரவில்லை. கடந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் திட்டமிடப்பட்ட பயணம் அமெரிக்க வாஷிங்டன் மீது சீன பலூன் காணப்பட்டதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. மீண்டும் உறவுகளை தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பயணத்துக்கு முன்பு “உளவு பலூனை” பறக்கவிடப்பட்டிருப்பது வேண்டுமென்றே அமெரிக்காவை சீண்டிப்பார்க்கும் ஒரு விஷயமாக அந்த நாடு நினைத்தது. சீனா என்று வரும் போது அமெரிக்கா ஒரு வெறிப்பிடித்த மனநிலையில் இருப்பதையே “குடிமக்கள் வானிலை வான்கலத்தை” சுட்டி வீழ்த்த அமெரிக்கா எடுத்த முடிவு காட்டுவதாக சீனா விமர்சித்தது. உலகின் பிற நாடுகளைப் பொறுத்தவரையில் சமீபத்திய நிகழ்வுகள் பிளவு எந்த முடிவும் இல்லாமல் தொடரும் என்பதையே காட்டுகிறது. தனது ஒட்டுமொத்த அமெரிக்காவுடனான போட்டியின் கண்ணோட்டத்தில் உலகின் பிற பகுதிகளைப் பார்க்கும் சீனா, தனது அண்டை நாடுகளுடன் இணக்கமாக இருக்கும் அதே வேளையில், ஐரோப்பாவுடனான உறவுகளை சரிசெய்வதாகத் தெரிகிறது.  சீனா இந்த ஆண்டு ஒரு பெரிய மத்திய ஆசிய உச்சிமாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் ஜப்பானுடனான அதன் சிக்கலான உறவுகள் கொஞ்சம் மேம்பட்டு வருகின்றன.  இதற்கிடையில், அமெரிக்கா இந்த பிராந்தியத்தில் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை  மேம்படுத்தி வருகிறது. யுக்ரெயின் போரின் விளைவுகளை இந்தியா இதுவரை தனது சுய நலனைக் கடைப்பிடிப்பதன் மூலம் திறம்பட நிர்வகித்து வந்தாலும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது சீனா ஒரு தனித்துவமான சவாலை முன்வைக்கிறது. குவாட் அமைப்புக்கு சீனா அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நில எல்லைகளில் தொடர்ந்து ஏற்படும் அழுத்தத்துக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். தைவான் முதன்மையான கவலையாக இருந்தாலும், சீனா-அமெரிக்கா இடையிலான உறவுகள் மோசமாகி வருவது இரண்டு முனைகளில் போராடும் சீனாவின் கணக்குகளை மாற்றுமா என்று இந்தியா மதிப்பிடலாம். நிச்சயமற்ற தன்மையும் கடினமான சவால்களும் இருக்கும் பெருகிவரும் பிளவுபட்ட உலகில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்தியா சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT