2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக தற்போதைய நிதிநிலை அறிக்கையில் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து நிறைய பேசப்பட்டுவிட்டது, தற்போதுள்ள வரி விலக்குகளை விட்டுக்கொடுப்பவர்களுக்கு குறைந்த வரி விகிதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. வருமானம் மற்றும் சேமிப்பு வரி செலுத்துவோர் புதிய “இயல்புநிலை” முறைக்கு மாற எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க வல்லுநர்கள் மாறுபட்ட கணக்குகளை சொல்கிறார்கள். “நடுத்தர வர்க்கத்திற்கு கொஞ்சம் சமூக பாதுகாப்பை வழங்கும்” விலக்குகளை முற்றிலுமாக நீக்க அரசு விரும்புகிறது என்று எதிர்க்கட்சிகள் கவலைப்படுகின்றன. இதனால் சேமிப்பு விகிதம் பாதிக்கப்பட்டு முதலீடுகள் அடி வாங்கும் என்பது தொழில்துறையினரின் கவலையாக இருக்கிறது. சேமிப்பு விகிதங்கள் பாதிக்கப்படாது என்று இப்போதைக்கு அரசு அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் வரி விலக்குகளைப் பெற போதுமான அளவு சேமிக்காததால் அதிக வரியைச் செலுத்துகிறார்கள். “ஒரு வயது வந்தவராக உங்களுக்கு எது பொருத்தமானது என்பதை தீர்மானிக்கும் சிறந்த நீதிபதியாக நீங்கள்தான் இருக்க வேண்டும்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை அன்று சொன்னார். தனித்தனியாகப் பார்த்தால் எல்லாமே சரியான வாதங்களே. ஆனால், தங்களுக்கான சிறந்த நீதிபதிகளாக தாங்களே இருக்கும் நிலையில் பலர் இல்லை என்பதை பரந்துப்பட்ட அளவில் பார்க்கும் போது கணக்கில்கொள்ள வேண்டும். புதிய வரி முறையில் அதிக பயனடைவார்கள் என்று அரசு நம்பும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் நிச்சயம் அந்த நிலையில் இல்லை.
இந்தியாவின் கல்வியறிவு மற்றும் நிதி சார்ந்த கல்வியறிவு நிலைகளை வைத்துப் பார்க்கும்போது நுகர்வு மற்றும் சேமிப்பின் சரியான கலவை பற்றி வரி செலுத்துபவர்களுக்கு போதுமான அளவு தெரிந்திருக்காது எனலாம். இதுவே இப்படியென்றால் சேமிப்புகளை, பாதுகாப்பான, பணவீக்கத்தை வெல்லும் முதலீடுகளின் பொருத்தமான கலவையாக மாற்றுவது பற்றி சொல்லவே
வேண்டாம். பொருளாதார வல்லுனர்கள் நினைக்கும் அளவுக்கு வயது வந்த மனிதர்கள் பகுத்தறிவுடன் நடந்து கொள்வதில்லை. உதாரணத்துக்கு, புதிய வரி விதிப்பு முறையில் கையில் கிடைக்கும் சம்பளம் அதிகமாக இருக்கும் நிலையில் அதனால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் அதிகமான நுகர்வை நோக்கி நகரும் போக்கு இருக்கிறது. சந்தை நுணுக்கங்கள் மற்றும் பெரிய அளவில் வெளியே தெரியாத அபாயங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களிடம், நிதி முதலீட்டுத் திட்டங்கள் வழக்கமாகவே தவறாக விற்கப்படுகின்றன. இன்னமும் சர்வதேச சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார நன்மைகளை வழங்க முடியாத ஒரு நாட்டில், பழைய விலக்கு அடிப்படையிலான வரி முறை, வாழ்வின் நிச்சயமற்ற தன்மைகளைச் சமாளிக்க ஓரளவு விவேகமான சொத்து ஒதுக்கீட்டை நோக்கி குடும்பங்களை வழிநடத்த உதவுகிறது. பணி வாழ்வின்போதே தலைக்கு மேல் கூரையை கட்டிக்கொள்ள ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது. பங்குகளில் இந்தியாவின் சில்லறை பங்கேற்பு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்திருக்கலாம். ஆனால் எல்லோரும் பங்குச் சந்தைகளின் அபாயங்களைக் கையாள முடியாது. செல்வாக்கு செலுத்துபவர்களால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கவும் முடியாது. எனவே, பழைய வரி விதிப்பு முறையிலிருந்து விடுபடுவதற்கு, அரசு மற்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டாளர்கள் நிதி தொடர்பான கல்வியறிவை அதிகம் தரும் முயற்சிகளை எடுக்க வேண்டும். கூடவே மக்களை வறுமையில் தள்ளும் நெறிமுறையற்ற விற்பனை நடைமுறைகளை கட்டுப்படுத்தவும் வேண்டும். மக்கள் தங்கள் நலனுக்காக செயல்பட அரசின் தூண்டுதல் தேவையில்லை என்றால், வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியங்களுக்கு கட்டாய பங்களிப்புகள்கூட தேவைப்பட்டிருக்காது.
This editorial has been translated from English, which can be read here.