தொடரும் சிக்கல்கள்

தரவு பாதுகாப்பு வரைவு மசோதாவில் பாதுகாப்புகளை மேலும் வலுப்படுத்துவது, அத்தியாவசியமானது.

November 23, 2022 10:32 am | Updated December 30, 2022 04:56 am IST

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவின் புதிய வரைவு, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022, தற்போது பொது மக்கள் கருத்துக்களுக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. தரவு தனியுரிமை மற்றும் இணைய ஒழுங்குமுறை குறித்து ஒரு ‘விரிவான சட்ட கட்டமைப்பை” கொண்டு வருவதாகச் சொல்லி அரசு, இதற்கு முந்தைய வரைவை திரும்பப் பெற்றிருந்தது. இந்த வரைவு, இதற்கு முந்தைய வடிவங்களை மேம்படுத்துவதற்கான ஒரு தனிப்பட்ட முயற்சி போல தெரிகிறது. எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக வெறும் 30 உட்பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் இதன் விளைவாக, தனிநபர் பாதுகாப்பு பற்றிய அம்சங்களில் அதிக தெளிவில்லாமல் இருக்கிறது. தரவை முதன்மையாக கொண்டவரிடமிருந்து தரவு பொறுப்பாளர்கள் அவர்களது தரவுகளை கையாள்வதற்கான ஒப்புதல் பெறுவதற்கான தேவையை உட்பிரிவுகள் எப்படி வரையறுக்கின்றன என்பது ஒரு உதாரணம். இப்போது, தரவுகளை முதன்மையானவர்களின் ஒப்புதலை பெறுவதற்கு ஒரு அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். ஒப்புதல் திரும்பப் பெறப்படும் போது சேமிக்கப்பட்ட அல்லது பிறருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தரவுகளை நீக்குவதற்கு பொறுப்பாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும். 2018 வடிவத்தைப் போல அல்லாமல் புதிய வரைவு, சேகரிப்பு வரம்பு போன்ற முக்கியமான தரவு பாதுகாப்பு கொள்கைகளை குறிக்கவில்லை. சேகரிப்பு வரம்பு என்பது கையாளும் நோக்கத்திற்காக தேவைப்படும் அளவே தனிநபர் தரவுகளை சேகரிக்கும் தரவு பொறுப்பாளர்களின் கடமையைக் குறிக்கிறது. அதே போல தரவுகளை முதன்மையாக கொண்டவர்களிடம் அந்த தரவுகள் யாரிடம் பகிர்ந்து கொள்ளப்படும், எவ்வளவு காலத்துக்கு சேமித்து வைக்கப்படும் போன்ற தகவல்களை தரவு பொறுப்பாளர்கள் பகிர்வது பற்றிய கடமைகளையும் அது உள்ளடக்கவில்லை. அதனால், தனிநபர் தரவு பற்றியும் தரவு பொறுப்பாளர்கள் தரவுகளை கையாள்வது பற்றியுமான தகவல்களின் வடிவத்தில் தரவை முதன்மையாகக் கொண்டவர்களின் விரிவான பாதுகாப்பு இப்போது இல்லை. ஆனால் சேமிக்கப்பட்ட தரவுகளில் உள்ள மீறல்கள் குறித்து தரவுகளை முதன்மையாக கொண்டவர்களிடத்தில் தரவு

பொறுப்பாளர்கள் அறிவிப்பது பற்றியும், தரவு பாதுகாப்பு அதிகாரம் பற்றியும் ஒரு முக்கியமான உட்பிரிவு இருக்கிறது.

இந்த புதிய வரைவு, தரவு பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதையும் முன்மொழிகிறது. அதில் எத்தனை உறுப்பினர்கள் இருப்பார்கள், எத்தகையவர்கள் இருப்பார்கள், தேர்வுகள் எப்படி நடக்கும் போன்றவற்றை மத்திய அரசு பரிந்துரைக்கும். முந்தைய வரைவுகள் போலவே, தரவு பாதுகாப்பு ஆணையத்தின் தேர்வு நீதித்துறை மேற்பார்வையில் நடக்கும் என்று பரிந்துரைத்த ஸ்ரீகிருஷ்ணா குழு வரைவிலிருந்து இது வேறுபடுகிறது. முன்மொழியப்பட்ட வாரியத்துக்கு மத்திய அரசிடமிருந்து போதுமான சுதந்திரம் இருக்காது என்பது ஒரு கவலை. அதிக அளவிலான தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கிறது என்கிற அளவில் அரசும் ஒரு தரவு பொறுப்பாளர்தான். தரவை முதன்மையாகக் கொண்டவர்களிடமிருந்து அறிந்தளிக்கப்பட்ட ஒப்புதலை பெறுவதிலிருந்து அரசு நிறுவனங்களுக்கு 2018 மசோதா விலக்களித்தது. அதே போல “அரசு பாதுகாப்பு” தொடர்புடைய விஷயங்களில் மட்டும் அவர்களது தரவுகளை கையாள்வதற்கு அத்தகைய ஒப்புதல் பெறுவதிலிருந்து விதிவிலக்களித்தது. நாடாளுமன்ற மேற்பார்வைக்காகவும் தனிநபர் தரவுகளை பெறுவதில் கருத்தொற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டால் அதன் பொருட்டு நீதித்துறை ஒப்புதலுக்காகவும் ஒரு சட்டத்தையும் அது பரிந்துரைத்தது. ஆனால் புதிய வரைவு மசோதா, பரந்துபட்ட தெளிவில்லாத வார்த்தைகளைக் கொண்ட விதிவிலக்குகளையும் கருவிகளையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதனால் பரந்த அளவிலான கண்காணிப்புக்கு நிகராக நிர்வாகம் தரவுகளை சேகரிக்க அது அனுமதிக்கிறது. பொது மக்கள் எப்படி கருத்து தெரிவித்தாலும் கூட, தரவு பாதுகாப்பு மசோதாவில் உள்ள விதிகளை கடுமையாக்குவதற்கு நாடாளுமன்றம் முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு வலிமையான தரவு பாதுகாப்பு சட்டத்தை வழங்க வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.